தமிழ் தேசியகூட்டமைப்பு தலைமைகளுக்கு ஓர் அவசர அவசிய வேண்டுகோள்;....

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்கள் அக் கூட்டமைப்பிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

நான்கு கட்சிகளுக்கும் கட்சிக்கொரு அமைச்சுப்பதவி வழங்குங்கள் என்று தமிழ் பேசும் மக்களாகிய நாம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வேண்டுகோள் செய்கின்றோம். மக்களாகிய நாம் கட்சிகளின்கொள்கைகளுக்கோ அல்லது வேட்பாளர்களுக்கோ வாக்களிக்கவில்லை மாறாக தமிழ் மக்களின் ஐக்கியத்தை வெளிப்படுத்தி சர்வதேச ரீதியாக எமது உரிமையை வென்றெடுக்க அபிவிருத்தி, உதவிகள் போன்ற அனைத்து சேவைகளையும் மறந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்தோம். அதன் பிரதிபலனாக வடமாகாண சபை மூன்றில் இரண்டுக்கு மேலாக வெற்றி பெற்றுள்ள இந்ந சந்தர்ப்பத்தில் மாகாணஅரசையும், தமிழர்களின் உரிமைப்போராட்டத்தையும் வெற்றிகரமாக முன்னெடுத்து செல்வதற்கு ஏதுவாக கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் நான்கு கட்சிகளுகம் தலா ஒரு அமைச்சு என வழங்கி கூட்டமைப்பின் ஒற்றுமையைப் பலப்படுத்துவீர்கள் என நம்புகினறோம்.


தலைவர்களே! மக்கள்களாகிய நாங்கள் ஒற்றுமையாகவும் விட்டுக்கொடுப்புடனும் செயல்ப்பட்டுள்ளோம் . உங்கள் செயற்பாட்டையும் அப்படியே எதிர்பார்த்து..... கையொப்பமிட்டு அனுப்ப வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்காக மக்களாகிய நாம் மனம் வருந்துகின்றோம்.


நன்றி

இவ்வண்ணம்.
தமிழ்த் தேசிய கூட்டமைபிற்கு வாக்களித்த மக்கள்

உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிக்க என்ன உணவுகள் சாப்பிடலாம்!

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்த்தால் நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும்.

பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.

தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும் ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும் பசியையும் தூண்டும் தன்மை கொண்டது விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்

கள்ளக்கா தலியின் நிர்வாணப்படத்தை இணையத்தில் வெளியிடப் போவதாக மிரட்டியவருக்கு விளக்கமறியல்!

கள்­ளக்­கா­த­லியை தாக்கி, நிர்­வாண கோலத்தில் புகைப்­ப­ட­மெ­டுத்து, இணை­யத்­த­ளத்தில் வெளி­யிடப் போவ­தாக அச்­சு­றுத்­திய வர்த்­தகர் ஒரு­வரை நீர்­கொ­ழும்பு பிர­தான நீதிவான் ஏ.எம்.என்.பி.அம­ர­சிங்க எதிர்­வரும் 15 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

நீர்­கொ­ழும்பு லுனு­கட சந்­தியில் அமைந்­துள்ள ஹார்ட்­வெயார் ஒன்றின் உரி­மை­யா­ள­ரான 26 வய­து­டைய ஒருவரே விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­வ­ராவார். சந்­தேக நபர் தளு­வத்தை பிர­தே­சத்தைச் சேர்ந்த 35 வயது­டைய திரு­ம­ண­மான பெண்­ணுடன் கடந்த ஐந்து
வருட கால­மாக இர­க­சிய தொடர்பு கொண்டு வந்­துள்ளார். வழக்கின் முறைப்­பாட்­டா­ள­ரான குறித்த பெண்ணின் கணவர் வெளி­நா­டொன்றில் தொழில் செய்து வரு­வ­தாக ஆரம்­ப­ கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்துள்ளது.

இதே­வேளை, முறைப்­பாட்­டா­ள­ருக்கு வேறு சில­ருடன் இர­க­சிய தொடர்பு இருப்­ப­தாக சந்­தேக நப­ருக்கு தெரிய வந்­துள்­ளது. இதனை அடுத்து தொலை­பேசிக் கட்­டணம் செலுத்­த­வென முறைப்­பாட்­டா­ளரை சந்­தேக நபர் அழைத்துச் சென்று தனது கடையின் களஞ்­சி­ய­சா­லையில் வைத்து அவரை தாக்­கி­யுள்­ள­துடன் நிர்வாணக் கோலத்தில் அவரைப் புகைப்­படம் எடுத்­ததுடன் பின்னர் நிர்­வாணப் படத்தை இணை­யத்­த­ளத்தில் வெளி­யிடப் போவ­தாக அச்­சு­றுத்­தி­யுள்ளார்.

இது தொடர்­பாக பாதிக்­கப்­பட்ட பெண் நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­ததையடுத்து பொலிஸார் சந்­தேக நபரை கைது செய்து கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இத்தாலி படகு விபத்தில் இறப்பு எண்ணிக்கை 300 ஆக உயரும்!

ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடிபுக விரும்புகிறவர்கள் இத்தாலி கடல் வழியாக அங்கு பயணம் மேற்கொள்கின்றனர் இதில் அதிகம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் வறுமை, உள்நாட்டு சண்டை காரணமாக மக்கள் திருட்டுத்தனமாக குடிபெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இத்தாலி நாட்டின் தெற்குப்பகுதியில் உள்ள 'லாம்பெடுசா' கடல் பகுதியூடாக சட்டவிரோதமாக குடிபுக படகில் பயணம் மேற்கொண்ட 500 பேர் சென்று கொண்டிருந்த படகு திடீரென படகு கவிழந்ததில் படகில் இருந்த 500 பேரும் கடல் நீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருப்பதாக அறிந்த இத்தாலி கடல் மீட்புக்குழுவினர் அங்கு தேடுதல் வேட்டையை தொடங்கி இதுவரை 140 பேரை காப்பாற்றியுள்ளதுடன் நீரில் மூழ்கி இறந்தவர்கள் 82 பேரின் உடல்களை வெளியே எடுத்துள்ளனர்

இன்னும் நூற்றுக்கணக்கானோர் கடலில் மூழ்கியிருப்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது படகு விபத்து ஏற்படுவதற்கு முன்பு தீப்பிடித்ததாக கூறப்படுகிறது இந்த வாரம் தொடக்கத்தில் சிசிலி தீவு அருகே இதுபோன்று சட்டவிரோதமாக குடிபுக முயன்றோரின் படகு கவிழ்ந்து 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவால் கடன் எடுப்போம்....! இந்தியாவுக்கு அதைக் கொடுப்போம்....!

அமெரிக்காவில் சிறைவைக்கப்பட்டுள்ள கியுபாவின் இராணுவ வீர்ர்கள் ஐவரையும் எங்களது இராணுவ வீர்ர்கள் எனக் கருதி, அவர்களை விடுதலை செய்வதற்காகச் செய்யும் யுத்தமும், எங்கள் நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளை முறியடிக்கும் யுத்தமும இரு வேறானவையல்ல, ஒரே யுத்த்த்தின் அத்தியாவசிய பிரிவாக நினைத்துச் செயற்படுமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நிர்மாண பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீவன்சவினால் இலங்கையரைச் சந்தித்து தெளிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியுடன் இணைந்து இலங்கையிலுள்ள பொலிவேரிய சகோதரத்துவ அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த ‘அமெரிக்கப் பலவந்தமும் கியுபாவின் 5 எடுத்துக்காட்டுக்களும்’ எனும் தலைப்பில், அமெரிக்காவில் 15 ஆண்டுகளாக நியாயமற்ற முறையில் சிறைவைக்கப்பட்டுள்ள கியுப நாட்டைச் சேர்ந்த ஐவரையும் விடுதலை செய்யுமாறு கோரி இலங்கையிலுள்ள கியுபத் தூதுவர் திருமதி இந்திரா லோஜேஸ் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் விசேட உரை நிகழ்த்தும்போதே அமைச்சர் விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய விமல் வீரவன்ச,


‘பெலிவேரியா சகோதரத்துவ அமைப்பு இன்று செய்துகொண்டிருப்பது சர்வதேச ரீதியாக இந்நாட்டுப் பொதுமக்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள பாரிய கடமைக்கும் பொறுப்புக்கும் உரம் சேர்க்கும் விடயமாகும். இலங்கையில் எங்களுக்கு சர்வதேசத்தின் பொறுப்புக்கள் பற்றி தெரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்காது. அதற்குக் காரணம் கியுபாவோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அவர்களைப் போன்று அவர்கள் முகங்கொடுத்தது போன்று இல்லாவிட்டாலும் மற்றொருமுறையில் கியுபாவை விடவும் அதிகமாக உலக பலம்மிக்க ஏகாதிபத்தியவாதிகளின் கைகளுக்குள் சிக்குண்டுண்டு கிடந்தமையாகும். அதற்கு எதிராக இலங்கையர்களான எங்களுக்குள் எழுகின்ற உணர்வுகள் கியுபா நாட்டினரின் உணர்வுகளைத் தெரிந்து கொள்வதற்கு எங்களுக்கு உதவுகின்றன.

கியுபா கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பெரும் தைரியத்துடன் அழியாத பெருநம்பிக்கையுடன் தங்களது இருப்பையும் கொள்கைகளையும் விட்டுக்கொடுக்காதிருப்பதனாலேயே நாங்கள் கியுபா மீது அன்பு செலுத்துகிறோம். அதுமட்டுமன்றி, அந்நாடு கியுபாப் பொதுமக்களின் நம்பிக்கையையும், அன்பையும், கௌரவத்தையும் நாளுக்கு நாள் பெற்று உலகுக்கு மாபெரும் முன்மாதிரியைக் காட்டிவருகின்றது.

பலம்மிக்க அரசுகளின் தீமைகளுக்குக் கட்டுப்பட்டு கால்மடித்திருப்பது அழகியல் காட்சியாக மாறியுள்ள யுகத்தில், பலம்மிக்க அரசாங்கங்களின் அநியாயங்கள், கெட்ட விடயங்களுக்கு சோரம் போயுள்ள உலகில் கியுபாவிடமுள்ள சக்தியானது மிகப் பலம்பொருந்தியது. பாரிய பலத்திற்கு எடுத்துக்காட்டு. எனவேதான் ஏகாதிபத்தியவாதத்திற்கு எதிரானவர்களின் பெருவரவேற்பு அதற்குக் கிடைக்கிறது.

கியுபா மக்கள் கியுபாவின் கம்பியூனிஸ்ட் கட்சியுடன் மேற்கொண்டுவரும் பிரச்சினையானது கியுபாவுக்கு மட்டும் விசேடத் தன்மை வாய்ந்த பிரயத்தனம் அல்ல. கியுபா மக்கள் தேர்ந்தெடுத்த சமூக, பொருளாதார திட்டம் தொடர்பாக நாங்கள் ஒருவருக்கொருவர் உடன்பாட்டுடனும் உடன்பாடில்லாமலும் இருந்தாலும் நாங்கள அனைவரும் உடன்படும் ஒரு பொதுவான விடயம் இருக்கின்றது. அதுதான், கியுபா மக்களுக்கு சுயாதீன இனங்களுக்கு உள்ள உரிமையை தட்டிப் பறிக்க எந்தவொரு பலம் வாய்ந்த இனத்திற்கும் பலம் வாய்ந்தவர்களுக்கும் எந்தவொரு அதிகாரமும் இல்லை என்பது.

(நீளும்...)
(தமிழில்: கலைமகன் பைரூஸ்)

சர்வதேச தரபுகைப்படத்துடன் இனி இலங்கை கடவுச்சீட்டு!

2014 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச தரம் வாய்ந்த புகைப்படத் தன்மையுடன் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என இலங்கை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

அதன்படி அடுத்த வருடம் முதல் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தால் அங்கீகாரம் பெற்ற நிலையங்களில் மாத்திரமே கடவுச்சீட்டுக்கு புகைப்படம் எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளதுடன் புதிய புகைப்பட நிலையங்களை பதிவு செய்யும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் 15ம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களைப் பெற முடியும் எனவும் இது குறித்து 0115 731028 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள முடியுமென இலங்கை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

வடக்குத் தமிழரும் கிழக்கு முஸ்லிம்களும் இணைந்து தமீழீழத்தைக் கட்டியெழுப்ப முயல்கிறார்கள்....?

சந்தர்ப்பவாத அரசியலாளர்கள் இறந்தவர்களின் நெற்றிகளில் பொறிக்கப்பட்ட அரசொன்றைக் கட்டியெழுப்புவதற்கே முயற்சிசெய்கிறார்கள் என தேசிய சுதந்தர முன்னணி குறிப்பிடுகிறது.

அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கொழும்பு நகராளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் அவர்களினால் இவ்வாறு குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் வருமாறு:

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மாகாண சபைகளுக்குள் முழுமையாக செயற்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபையில் நேற்று முன்தினம் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டு அது வெற்றிபெற்றுள்ளது. அது மிகப் பாரதூரமான காரியம் என்று குறிப்பிடுகின்றது தேசிய சுதந்திர முன்னணி. 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைகள் என்பன பிரிவினைவாதத்திற்கு வழிகாட்டக்கூடியன என்பதே தேசிய சுதந்திர முன்னணியின் நிலைப்பாடாகும். தற்போது வடக்கு கிழக்கில் உள்ள மாகாண சபைகளின் அதிகாரங்கள் கூட பிரிவினைவாதத்தை போஷிப்பவை என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் 13 இனை உள்ளது உள்ளவாறே செயற்படுத்தற்கு கிழக்கு மாகாண சபையில் கொண்டுவரப்பட்டுள்ள வெற்றிகண்டுள்ள பிரேரணையானது பயங்கரமானதாகும். நாங்கள் இதற்கு முன்னரும் பலமுறை சுட்டிக் காட்டியது என்னவென்றால், வடக்கு கிழக்கினை மீண்டும் ஒன்றிணைப்பதானது மீண்டும் ஈனியா வுடனான தமிழ் அரசு மற்றும் முஸ்லிம் அரசுத் துண்டங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வழிவகுப்பதாகும். பிரிவினைவாதத்துடனான யுத்தத்தை தோல்வியடையச் செய்து, பெற்றுக் கொண்டுள்ள வெற்றியை சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவரும் அனுபவிக்கவிடாது, அவர்கள் அனைவரையும் மீண்டும் இருண்ட யுகத்திற்குள் பலாத்காரமாகத் தள்ளும் முயற்சியாகும்.

உண்மையில் உருவாக்க முயற்சிப்பது தமிழ் முஸ்லிம் துண்டங்கள் ஒன்றிணைந்த ஒரு அரசாங்கம். அது துயரத்தில் வாடும் தமிழனினதோ முஸ்லிமினதோ அரசாங்கம் அல்ல. அவர்களை துன்பத்திலிருந்து மீட்டெடுக்கும் அரசாங்கம் அல்ல. பிற ஏகாதிபத்தியவாதிகளின் தேவைக்கு உருவாக்கப்படுகின்ற, இறந்தவர்களின் நெற்றிகளில் எழுதப்படுகின்ற, பழக்கப்பட்ட துயரங்களுக்குப் பதிலாக பாரிய துன்பங்களை ஏற்படுத்தக்கூடிய அரசாங்கமாகும்.


அந்த துயர்மிக்க அரசாங்கத்திற்கு அப்பாவி தமிழ் முஸ்லிம் மக்களை ஏமாற்றும் இனவாத அரசியல் சார்ந்த அரசியலாளர்கள் பற்றி ஏற்கனவே தேசிய சுதந்திர முன்னணி எதிர்வுகூறியுள்ளது. வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இலங்கையர் என்ற ஒரு குடையின் கீழ் பலமாக உரிமைகளைப் பெற்றுக் கொள்வதா? இல்லாவிட்டால், சின்னஞ் சிறு வேலிக்கம்பங்களுக்கிடையே நின்று கொண்டு பிற எதிர்பார்ப்புக்களுடன் பலியாகி கொன்றொழிக்கும் பூமியை இலக்காகக் கொள்வதா? என மக்கள் கட்டாயம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர் என்பதை தெளிவுறுத்துகிறோம்.

இதனை அரசியல் சட்டத்தின் மூலம் தர்க்க ரீதியான சட்டங்களின் மூலம் மட்டும் தெரிந்துகொள்ள முடியாது. தற்போதைய சூழ்நிலை, வரலாறு, எதிர்காலம் அனைத்தையும் எடுத்துநோக்கினால்தான் இதுபற்றிய தெளிவைப் பெறலாம், முடிவெடுக்கலாம். அந்த முடிவைச் சரிவர எடுக்காதவிடத்து, வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் சமூகம் பெரும் பாதிப்புக்களைச் சந்திக்க வேண்டிவரும். அவர்களின் தலைவர்களாகக் காட்சிகொடுக்கின்ற இந்த சந்தர்ப்பவாதிகள் பற்றி எங்களுக்கு நினைவுக்கு வருவது என்னவென்றால், கோழிப்பண்ணையொன்றுக்குப் பொறுப்பாக வெளி எல்லையில் நிற்கின்ற நரிகள் அந்த கோழிப்பண்ணையின் உரிமையைப் பெறுவதற்காக எடுக்கின்ற முயற்சியாகும்.

நியாயமற்ற அரசியல் திட்டமொன்றுடன் தங்களது சூழ்ச்சிக்குள் சிக்கவைக்க முயல்கின்ற இந்த பிரிவினைவாதிகள் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணி ஆச்சரியப்படுவதில்லை. அத்துடன், அரசாங்கத்தின் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, சகல வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டு எதிரியாக நின்று யோசனைகளை முன்வைக்கின்ற இவர்கள் பற்றி எங்களுக்கு வெறுப்பு மட்டுந்தான் உண்டு. அரசியலுக்காக என்றும் பிரிவினைவாதிகளுடன் நின்றுகொண்டு, இலங்கையரின் வாக்குகளால் அன்றி மேற்கத்தேயவரின் வாக்குகளால் பலத்தை பெற எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி விடயத்தில் எங்களுக்கு அநுதாபமே ஏற்படுகின்றது. குறித்த பிரேரணைக்காக வாக்களித்த ஆட்சியாளர்கள் விடயத்திலும் நாங்கள் சற்றுக் கவலையுறுகிறோம். மாகாண சபை தொடர்பில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டைக் கூடக் கருத்திற் கொள்ளாமல், அதனால் ஏற்படும் பாரதூர விளைவுகள் பற்றிச் சிந்திக்காது அவர்கள் எடுத்த முடிவானது பிரிவினைவாதத்திற்கு எதிரான தங்களது தலைமைத்துவத்தையும், அரசையும் நிலைகுலையச் செய்வதாகும்.

எது எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கு இரு மாகாணங்களிலும் அப்பாவி சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் அனைத்தையும் மீண்டும் அநாதையில்லங்களில், காப்பகங்களில் இட்டுச் செல்லும் இந்த ‘தனியரசு’ நாடகம் தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி ஆவன செய்ய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி எதிர்பார்க்கிறது என்பதை கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம்.

(கலைமகன் பைரூஸ்)