சூர்யாவால் கவலைப்படும் சமந்தா

சூர்யாவின் ஜோடியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கும் திரைப்படம் தள்ளிப்போவதால் கவலையில் உள்ளாராம் நடிகை சமந்தா. கடந்த வருடம் இரண்டு பிலிம் பேர் விருதினை தட்டிச் சென்ற சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியாக வலம் வருகின்றார். தற்போது தெலுங்கில் பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளாராம். இரண்டு படத்திற்கான விருதுகளை பெற்றுச் சென்றாலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘கடல்’ மற்றும் ஷங்கரின் ‘ஐ’ ஆகிய இரு படங்களின் வாய்ப்பினை தனது உடல்நலப் பிரச்சனையால் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது லிங்குசாமியின் இயக்கத்தில், சூர்யாவுடன் ஜோடி சேர்வதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் அதன் படப்பிடிப்பானது இன்னும் தொடராமல் தள்ளிப்போவதால் கவலையில் உள்ளாராம். இதனால் மீண்டும் தெலுங்கிற்கு திரும்பி விடலாம் என்ற யோசனையில் உள்ளாராம்.