படம் டிராப் ஆனால் அட்வான்ஸ் பணத்தை திருப்பித்தர முடியாது... நயன்தாரா பிடிவாதம் - தயாரிப்பாளர் அதிர்ச்சி.


இயக்குனர் பூபதி பாண்டியன் படத்துக்கு வாங்கிய அட்வான்சை திருப்பி தர மறுத்தார் நயன்தாரா.பட புரமோஷனுக்கு வருவதில்லை, பெரிய ஹீரோக்களுக்குத்தான் கால்ஷீட் தருகிறார் என நயன்தாரா மீது பல புகார்களை கூறுகின்றனர். தற்போது வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி தரமறுத்த விஷயம் வெளிவந்துள்ளது. ‘ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். இவர் தற்போது புரமோஷன் ஆகி ஹீரோவாகி விட்டார். டோலிவுட் படங்களில் ஹீரோவாக நடிக்கும் அவர் தமிழிலும் ஹீரோவாக நடிக்கிறார். இதில் நயன்தாரா ஹீரோயின். இப்படத்தை தயாரிக்கும் அதே தயாரிப்பாளர், ஏற்கனவே ஒரு படத்தை தயாரிக்க இருந்தார். அதை இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்குவதாக இருந்ததாம். அந்த படத்துக்காக நயன்தாராவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்து, அட்வான்ஸ் பணம் தந்தார்கள். ஆனால் பூபதி பாண்டியனுக்கும் பட தயாரிப்பாளருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து இப்படத்தை இயக்குவதிலிருந்து பூபதி பாண்டியன் விலகிக்கொண்டார். படம் டிராப் ஆன நிலையில் நயன்தாராவுக்கு கொடுத்த அட்வான்சை திருப்பி கேட்டார் தயாரிப்பாளர். ஆனால் அவரோ, ‘அட்வான்ஸ் என்னிடம் அப்படியே இருக்கட்டும். வேறு ஒரு படம் தயாரியுங்கள் அதில் நடிக்கிறேன் என்றாராம். தயாரிப்பாளருக்கு தர்மசங்கடமாகிவிட்டது. வேறு இயக்குனரை வைத்து புதிய படம் தயாரிக்க முடிவு செய்தார். அப்படம்தான் தற்போது கோபிசந்த், நயன்தாரா நடிக்க உருவாக உள்ளது. சமீபத்தில் இதன் தொடக்க விழா சென்னையில் நடந்தபோது அதில் நயன்தாராவும் கலந்துகொண்டார். இயக்குனர் பூபதிபாண்டியன் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பதற்காக ஒரு மிகப்பெரிய தொகையை அட்வான்ஸாக வாங்கிவிட்டு கால்ஷீட் கொடுத்தார் நயன் தாரா. ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த படம் டிராப் ஆகிவிட்டது. எனவே தயாரிப்பாளர் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பிகேட்ட போது தரமுடியாது என நயன் தாரா கூறிவிட்டதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏறட்டுள்ளது. ஏற்கனவே இவர் பையா படத்திற்காக லிங்குசாமியிடம் அட்வான்ஸ் பணத்தை திருப்பிதராததால் இந்த பிரச்சனை தயாரிப்பாளர் சங்கம் வரை சென்று பின்னர் அட்வான்ஸை லிங்குசாமியிடம் திருப்பி கொடுத்தார். ‘ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். இவர் தற்போது புரமோஷன் ஆகி ஹீரோவாகி விட்டார். டோலிவுட் படங்களில் ஹீரோவாக நடிக்கும் அவர் தமிழிலும் ஹீரோவாக நடிக்கிறார். இதில் நயன்தாரா ஹீரோயின். இப்படத்தை தயாரிக்கும் அதே தயாரிப்பாளர், ஏற்கனவே ஒரு படத்தை தயாரிக்க இருந்தார். அதை இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்குவதாக இருந்ததாம். அந்த படத்துக்காக நயன்தாராவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்து, அட்வான்ஸ் பணம் தந்தார்கள். ஆனால் பூபதி பாண்டியனுக்கும் பட தயாரிப்பாளருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து இப்படத்தை இயக்குவதிலிருந்து பூபதி பாண்டியன் விலகிக்கொண்டார். படம் டிராப் ஆன நிலையில் நயன்தாராவுக்கு கொடுத்த அட்வான்சை திருப்பி கேட்டார் தயாரிப்பாளர். ஆனால் அவரோ, ‘அட்வான்ஸ் பணத்தை திருப்பித்தர முடியாது. வேண்டுமானால் அந்த கால்ஷீட் தேதிகளை வேறு படம் நீங்களே தயாரித்தால் மாற்றித்தருகிறேன் என்று கூறினாராம் நயன் தாரா. நயன் தாராவின் கால்ஷீட்டுக்காகவே கோபிசந்த்தை ஹீரோவாக்கி ஒரு படத்தை எடுத்து வருகிறார் தயாரிப்பாளர். கோபிசந்த ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.