வே புரோட்டின் அடங்கியுள்ள 104 வகை உணவு பொருட்களுக்கு எதிரான தடை நீக்கம்
மருத்துவ பரிசோதனை நிலையத்தினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 104 வகையான உணவுப்பொருட்களில் 'வே ப்ரோட்டின்' அடங்கியுள்ள உணவுப் பொருட்களில் 'க்ளொஸ்ட்ரீயம் பொட்டுலீனம்' பக்ற்றீரியா அடங்கியிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 10 ஆம் திகதி அமுலாகும் வகையில் வே ப்ரோட்டின் மற்றும் வே பௌடர் அடங்கியுள்ள உணவு வகைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பின், அவற்றை விநியோகத்திற்காக விடுவிக்குமாறு உணவு ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச இரசாயன ஆய்வு கூடங்களின் ஊடாக உறுதிசெய்யப்பட்ட அறிக்கைகள் மற்றும் மருத்துவ பரிசோதனை நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பிரதிபலன்களை கருத்திற்கொண்ட பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் அந்த உணவுப் பொருட்கள் மீது இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தவாறு க்ளொஸ்ட்ரீயம் பொட்டுலீனம் பக்ற்றீரியா அடங்கியிருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தும் விசேட அறிவித்தல் தொடர்ந்தும் குறிப்பிடப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
மருத்துவ பரிசோதனை நிலையத்தினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 104 வகையான உணவுப்பொருட்களில் 'வே ப்ரோட்டின்' அடங்கியுள்ள உணவுப் பொருட்களில் 'க்ளொஸ்ட்ரீயம் பொட்டுலீனம்' பக்ற்றீரியா அடங்கியிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 10 ஆம் திகதி அமுலாகும் வகையில் வே ப்ரோட்டின் மற்றும் வே பௌடர் அடங்கியுள்ள உணவு வகைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பின், அவற்றை விநியோகத்திற்காக விடுவிக்குமாறு உணவு ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச இரசாயன ஆய்வு கூடங்களின் ஊடாக உறுதிசெய்யப்பட்ட அறிக்கைகள் மற்றும் மருத்துவ பரிசோதனை நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பிரதிபலன்களை கருத்திற்கொண்ட பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் அந்த உணவுப் பொருட்கள் மீது இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தவாறு க்ளொஸ்ட்ரீயம் பொட்டுலீனம் பக்ற்றீரியா அடங்கியிருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தும் விசேட அறிவித்தல் தொடர்ந்தும் குறிப்பிடப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.